×

தீர்மான நகல்கேட்டு ஊராட்சி அலுவலகம் முன் வார்டு உறுப்பினர் தர்ணா

புதுக்கோட்டை, பிப்.18: திருவரங்குளம் ஒன்றியம் பள்ளத்திவிடுதி ஊராட்சி வார்டு உறுப்பினர் பஞ்சாயத்தில் போடப்பட்ட தீர்மான நகல் கேட்டு அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்களம் ஒன்றியம் பள்ளத்திவிடுதி பஞ்சாயத்தில் வார்டு உறுப்பினராக இருப்பவர் நடுப்பட்டி முருகேசன் (35). இவர் பஞ்சாயத்தில் போடப்பட்டுள்ள தீர்மான நகல் கேட்டு நேற்று பஞ்சாயத்து அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து திருவரங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags : Ward ,panchayat office ,Tarna ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...