×

கொடியேற்றத்துடன் துவக்கம் எண்ணெய் வித்து உற்பத்தியாளருக்கு உறுப்பினர் சான்றிதழ் வழங்கல்

ஜெயங்கொண்டம், பிப்.18: ஆண்டிமடம் வட்டாரம் வரதராஜன்பேட்டை கிராமத்தில் நபார்டு வங்கியும், கிரீடு வேளாண் அறிவியல் மையம் இணைந்து உருவாக்கிய ஆண்டிமடம் எண்ணெய் வித்து உழவர் உற்பத்தியாளர் நிறுவன உறுப்பினர் சேர்க்கைக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுகண்ணன் தலைமை வகித்து உழவர் உற்பத்தியாளர் கம்பெனியின் முக்கியத்துவம் மற்றும் உறுப்பினர்களின் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்து உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். தொடர்ந்து உழவர் உற்பத்தியாளர் கம்பெனியின் இயக்குனர் அந்தோணிசாமி மைய செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார். மேலும் மதிப்புக் கூட்டல் மையத்தை நிர்வகிக்கும் ஆசைத்தம்பி மதிப்புக்கூட்டல் மையத்தின் செயல்பாடுகளை எடுத்துரைத்தார். அடுத்து உறுப்பினர்கள் தங்களின் சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களை கேட்டு தெரிந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர்கள் ராஜா ஜோஸ்லின், ராஜ்கலா, சோபனா ஆகியோர் கலந்துகொண்டு தொழில் நுட்பங்களை வழங்கினார். இக்கூட்டத்திற்கு 40 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கம்பெனியின் உறுப்பினரான பங்கிராசு நன்றி கூறினார்.

Tags : oil seed producer ,
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா