×

உடையார்பாளையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா

ஜெயங்கொண்டம், பிப்.18: ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று 32வது சாலை பாதுகாப்பு மாத விழா நடந்தது. விழாவிற்கு தலைமையாசிரியர் கங்காதேவி தலைமை வகித்தார். தமிழ் ஆசிரியர் ராமலிங்கம் வரவேற்றார். உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விழிப்புணர்வு பற்றியும், பெண்கள் பாதுகாப்பு பற்றியும் விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் உடையார்பாளையம் தலைமை காவலர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உட்பட ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ஷாயின்ஷா நன்றி கூறினார்.

Tags : Road Safety Awareness Ceremony ,Udayarpalayam ,
× RELATED டூவீலர் மீது பிக்கப் வேன் மோதியதில் 2 பேர் காயம்