×

மயிலாடுதுறை அருகே வைக்கோல்போருக்கு தீ வைத்தவர் மீது வழக்கு

மயிலாடுதுறை, பிப்.18: மயிலாடுதுறை அருகே உள்ள மேலபாதி வடக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் பருதி(43). இவர் ஆண்டுதோறும் தனது வயலில் அறுவடை முடிந்ததும் சேகரிக்கப்படும் வைக்கோலை மேபாதி வடக்குத்தெரு வாய்க்காங்கரையில் போர் போடுவது வழக்கம். அதற்காக தரையை சரிசெய்துகொண்டிருந்தார். அந்த நேரத்தில் அங்கே வந்த கீழபாதி வடக்குத் தெருவை சேர்ந்த செல்லையன் மகன் அருள்(38) என்பவர் இந்த இடத்தில் வைக்கோல்போர் போடக்கூடாது, மீறி போட்டால் என்ன நடக்கும் தெரியுமா என்று மிரட்டிச் சென்றுள்ளார். ஆனால் பருதி தனது வயலில் உள்ள வைக்கோலை வாய்க்காங்கரையில் போர் போட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி மதியம் வைக்கோல்போருக்குத் தீவைத்துள்ளார். இதுகுறித்து பருதி அளித்த புகாரின்பேரில் செம்பனார்கோவில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து அருளை தேடிவருகின்றனர்.

Tags : Mayiladuthurai ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...