×

தெலுங்கப்பட்டியில் 100 நாள் திட்டப்பணியாளர்களுக்கு மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு

தோகைமலை, பிப். 18: கரூர் மாவட்டம் நேரு யுவகேந்திரா மற்றும் பொருந்தலூர் ஊராட்சி மன்றம் சார்பாக மழைநீர் சேமிப்பு குறித்து 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தெலுங்கபட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யா ராமசந்திரன் தலைமை வகித்தார்.இதில் நேரு யுவகேந்திரா மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர்கள் செல்வம் மற்றும் செல்வி ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் ரவி உள்பட 100 நாள் தி்ட்டப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Telangana ,project workers ,
× RELATED நாட்டையே உலுக்கிய ரோஹித் வெமுலா...