×

கட்சிக்காக உழைத்த எனது குடும்பத்தை அதிமுக கைவிட்டது: மாஜி எம்எல்ஏ மனைவி கண்ணீர்

வால்பாறை சட்டமன்ற தொகுதியின் அதிமுக எம்எல்ஏவான அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்தார். அவரது மனைவி கலைச்செல்வி. கணவர் மறைவுக்கு பிறகு வால்பாறை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வந்தார். ஆனால் அதிமுகவில் சீட் வழங்கப்படவில்லை. இந்நிலையில் அவர் அதிமுகவில் இருந்து விலகி நேற்று நாதகவில் இணைந்தார். பின்னர் நிருபர்களிடம் கலைச்செல்வி கூறுகையில், கடந்த 45 ஆண்டுகளாக என கணவர் அதிமுக கட்சிக்காக மட்டுமே உழைத்தார்.

குடும்பத்திற்காக அவர் எதையும் சேர்த்து வைக்கவில்லை. தேர்தலில் சீட்டு கேட்டிருந்தேன். ஆனால் கட்சிக்காக உழைத்த எங்களை பற்றி அறிந்தும் அதிமுக தலைமை கைவிட்டுவிட்டது. எஸ்.பி. வேலுமணியை நேரில் சந்தித்து மனு அளித்த போது, பார்த்துக்கலாம் என நம்பிக்கை அளித்தவர் அதன் பின் என்னை சந்திக்க கூட மறுத்து விட்டார். ஐந்து பெண்கள் கொண்ட எனது குடும்பம் இன்றைக்கு கைவிடப்பட்டுள்ளோம் என்று கண்ணீர் மல்க கூறினார்.

Tags : AIADMK ,MLA ,Valparai ,Amul Kandasamy ,Kalaichelvi ,
× RELATED தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில்...