×

விசிக ஆர்ப்பாட்டம்

மேச்சேரி, பிப்.18: நங்கவள்ளி  அடுத்த கோனூரில், இறைச்சிக்கடை நடத்தி வருபவர் ராசப்பன். இவர் வீரக்கல், மல்லிகுந்தம், கட்டி நாயக்கம்பட்டி, ஓமலூர், சாத்தப்பாடி  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 15 இளைஞர்களிடம், குடிநீர் வடிகால்  வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, ₹14.80 லட்சம் பண  மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. வீரக்கல் பகுதியை சேர்ந்த  சக்திவேல்(23) என்பவர், அரசு வேலை வாங்கி தருவதாக ராசப்பன் ₹1.25 லட்சம் பணம்  வாங்கி மோசடி செய்துவிட்டதாக, நங்கவள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்,  கடந்த 8ம்தேதி போலீசார் ராசப்பன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், நேற்று மோசடியில் ஈடுபட்ட ராசப்பனை  கைது செய்யக்கோரி, நங்கவள்ளி பேருந்து நிலையம் எதிரே விடுதலை சிறுத்தைகள்  கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். லோகநாதன் தலைமை வகித்தார். இதில் ரஞ்சித், அய்யாவு, ஜனா, ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, ராசப்பனை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.

Tags : Vizika ,demonstration ,
× RELATED நீட் தேர்வு ரத்து..பழங்குடியினருக்கு...