×

தீ விபத்தில் மோட்டார் அறை எரிந்து சாம்பல்

சேந்தமங்கலம்,  பிப்.18: சேந்தமங்கலம் அடுத்துள்ள துத்திக்குளம் சுட்டப்பாறை மேடு பகுதியை  சேர்ந்தவர் நடராஜன் (45). டாஸ்மாக் கடை மேற்பார்வையாளராக உள்ளார்.  இவருக்கு சொந்தமான தோட்டத்தில், மின் மோட்டார் தென்னங்கீற்று கொட்டகை  உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்துக்  கொண்டது. இது குறித்த தகவலின் பேரில் வந்த நாமக்கல் தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் ஒருமணி நேரம்  போராடி தீயை அணைத்தனர். இதில் மின்மோட்டார், மின் வயர், கொட்டகை தீயில்  எரிந்து சாம்பலானது.


Tags : motor room ,
× RELATED ஆலங்குளம் அருகே தேங்காய் பறிக்க...