கிருஷ்ணகிரி, பிப்.18: கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியத்தில், திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் செங்குட்டுவன் எம்எல்ஏ., தலைமையில் நடந்தது. கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியம், காட்டிநாயனப்பள்ளியில் நடந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., பங்கேற்று, ஆலோசனை வழங்கினார். அவர் பேசுகையில், ‘வருகிற சட்டமன்ற தேர்தலின் மூலம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்பதில், பூத் கமிட்டியின் பங்கு குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில், திமுக சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், வழக்கறிஞர் அணி விஸ்வபாரதி, தண்டபாணி, நிர்வாகிகள் வேலுமணி, ஆனந்தன், பழனி, சீனிவாசன், பையம்மாள் முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன், ரகுகுமார், இளங்கோவன், மணி, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.