கிருஷ்ணகிரி, பிப்.18: மூத்தோருக்கான தடகள் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற போலீசை மாவட்ட எஸ்பி பாராட்டினார். ஓசூர் அதியமான் கல்லூரியில், கடந்த 14ம்தேதி 45 வயது முதல் 50 வயது மூத்தோர்களுக்கான தடகள போட்டிகள், காவல்துறை சார்பில் நடத்தப்பட்டது. இதில், கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவில் ஏட்டாக பணிபுரியும் முருகன் கலந்து கொண்டு, 5 ஆயிரம் மீ. நடை போட்டி, தட்டு எறிதல் போட்டிகளில் தங்க பதக்கமும், ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கமும் பெற்றார். அவரை கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி.பண்டிகங்கதர் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்தினர். அப்போது எஸ்பி கூறுகையில், ‘போலீசார் உடற்பயிற்சி, யோகா உள்ளிட்டவை மேற்கொள்ள வேண்டும். மேலும், இதுபோன்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்,’ என்றார்.