×

காரிமங்கலம் அருகே லாரியுடன் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

காரிமங்கலம், பிப்.18: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம்-பாலக்கோடு ரோட்டில் உள்ள வெல்டிங் கடை முன், அரிசி மூட்டைகளுடன் லாரி ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், லாரியில் ஏறி பார்த்த போது மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வட்ட வழங்கல் துறை மற்றும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அந்த லாரியில் சோதனையிட்ட போது, 3 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார், லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் ரேஷன் கடைகளில் இருந்து, அதிகாரிகள் துணையுடன் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், பொதுமக்கள் தகவல் கொடுத்தாலும் கடத்தல்காரர்களுடன், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைகோர்த்து உள்ளதாக குற்றச்சாட்டுஎழுந்துள்ளது.

Tags : Karimangalam ,
× RELATED மாம்பழ கடைகளை அமைத்த வியாபாரிகள்