×

கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

சாத்தூர், பிப். 18: மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி(36). இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.  இவரது உறவினரான  ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த  துரைராஜ் வீட்டு புதுமனை புகுவிழாவிற்கு முத்துப்பாண்டி வந்துள்ளார்.  அப்போது சிவசங்கு பட்டி சாலையில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றவர் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்துள்ளார்.  தகவலறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர்  முத்துப்பாண்டியின் உடலை மீட்டனர். ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ