×

ராஜபாளையத்தில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம், பிப். 18: விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை 140 ரூபாயாக உயர்த்தி வழங்க கோரியும் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் ராஜபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மதுரை ராஜா கடை தெருவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்தையா, மாவட்ட பொருளாளர் பீமராஜா தலைமை வகித்தனர். மாநில அமைப்பாளர் விஜயமுருகன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமச்சந்திரராஜா ஆகியோர் விளக்கவுரையாற்றினர். இதில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

Tags : Demonstration ,Delhi ,Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தீவிர...