×

லாரியில் தீவிபத்து மூலிகைகள் நாசம்

திருச்சுழி,பிப்.18: காரியாபட்டி அருகே டிரைவர் வரதராஜன் லாரியில்,  விருதுநகர் சந்தைப் பேட்டையில் இருந்து மேலாநல்லி மூலிகை செடியை ஏற்றிக்கொண்டு தொட்டியன் குளத்தில் உள்ள பண்ணைக்கு கொண்டு சென்றார். அப்போது கே.ஆலங்குளத்தைக் கடக்கும் போது,  ரோட்டின் குறுக்கே மேல சென்ற மின்வயர் மீது உரசியதால் லாரியில் தீப்பிடித்து மூலிகைச் செடிகள் எரிந்தன. இதுகுறித்த தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், லாரியில் பற்றிய தீயை அணைத்தனர். ஆனாலும், 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மூலிகை செடிகள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. ஆம்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : fire ,
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா