×

காளையார்கோவிலில் கற்போம் எழுதுவோம் பயிற்சி வகுப்பு

காளையார்கோவில், பிப்.18: காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கற்போம் எழுதுவோம் இயக்கம் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகின்றது கொட்டகுடி ஊராட்சியில் கொல்லாம்பட்டி, கீழக்கோட்டை, பொய்யாமணிபட்டி, சடையம்பட்டி பகுதிகளில் உள்ள கல்லாதவருக்கு தன்னார்வல ஆசிரியை நித்தியா மூலமாக பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. கற்போருக்கு தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.இப்பகுதியிலுள்ள கல்லாதவருக்கு ஊராட்சி மன்றதலைவி, வார்டு உறுப்பினர்கள், தலைமையாசிரியை, பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து பிப்ரவரி மாதத்திற்குள் கையெழுத்து போட கற்றுத்தருவது என்றும் அதற்கு மாணவர்கள், படித்தவர்கள் அனைவரும் உதவுவது என முடிவு செய்யப்பட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கீழக்கோட்டை ஊரா ட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்பாக தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கத்தின் பயிற்சி வகுப்பினை காளையார்கோவில் வட்டார கல்வி அலுவலர் இந்திராணி பார்வையிட்டார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங் கை மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி ‘கைநாட்டு மறையட்டும் கையெழுத்து மலரட்டும்’ என்ற தலைப்பில் மக்களுடன் கலந்துரையாடினார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

Tags : Kaliningrad ,
× RELATED போக்குவரத்து நெருக்கடியை குறைக்க...