சிவகங்கை, பிப்.18: சிவகங்கை எஸ்பி இடமாற்றம் செய்யப்பட்டு புதிய எஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட எஸ்பியாக கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 2ல் சென்னை ரயில்வே எஸ்பியாக பணியாற்றி வந்த ரோகித்நாதன்ராஜகோபால் பொறுப்பேற்றார். இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். சிவகங்கை எஸ்பி ரோகித்நாதன் ராஜகோபால் சென்னையில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க விஜிலென்ஸ் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை எஸ்பியாக மதுரை அமலாக்கத்துறை எஸ்பியாக பணியாற்றி வரும் ராஜராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.