×

அதிமுக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு

திருப்புவனம், பிப்.18: திருப்புவனம் அருகே கலியாந்தூரை சேர்ந்தவர் சேங்கைச்சாமி(48). இவர் அதிமுக கிளைச் செயலாளராக உள்ளார். இவரை நேற்று காலை இதே ஊரை சேர்ந்த மாசாணம் மகன் முத்துக்குமார்(22) என்பவர் அரிவாளால் வெட்டினார். இது குறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிந்து முத்துக்குமாரை கைது செய்தனர். விசாரணையில், முத்துக்குமாரின் தாயாரிடம் சேங்கைச்சாமி அடிக்கடி பேசியதாக கூறப்படுகிறது. சந்தேகப்பட்ட முத்துக்குமார் சேங்கைசாமியை கண்டித்துள்ளார். ஆனால் சேங்கைச்சாமி தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார் அவரை அரிவாளால் வெட்டியுள்ளார்.இதில் பலத்த காயத்துடன் சேங்கைச்சாமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : AIADMK ,executive ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...