கமுதி, பிப்.18: கமுதி அருகே மாசிகளரி திருவிழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.கமுதி அருகே காடமங்கலம் கிராமத்தில் மாசி களரி திருவிழாவை முன்னிட்டு, கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் காடமங்கலம், கோட்டைமேடு, வேம்பார், சாயல்குடி, கமுதி உள்ளிட்ட 30 அணிகள் பங்கேற்றன. இதில் முதல் பரிசு வென்ற காடமங்கலத்தைச் சேர்ந்த பசும்பொன் கிரிக்கெட் கிளப்பிற்கு திமுக தெற்கு மாவட்ட கவுன்சிலர் சசிகுமார் மற்றும் மணி ஆகியோர் சுழற் கோப்பையும் ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கினர்.இரண்டாம் இடம்பெற்ற வேம்பார் அணிக்கு சுழற் கோப்பையும், ரூ.20 ஆயிரம் ரொக்கப் பரிசும்வழங்கினர். மூன்றாமிடம் பெற்ற கோட்டைமேடு அணிக்கு சுழற்கோப்பையும் ரூ.15 ஆயிரம்ரொக்கப் பரிசும் வழங்கினர். தொடர் நாயகன் விருது பெற்ற கண்ணன் என்பவருக்கு சுழற்கோப்பை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.