×

மறியல் செய்த 30 பேர் கைது

உசிலம்பட்டியில்  டிஎன்டி சான்றிதழ் கேட்டு, சீர்மரபினர் நலச்சங்கத்தினர்சாலை மறியலில்  ஈடுபட்டனர். நேற்று உசிலம்பட்டி தேவர்சிலை முன்பு தமிழக விவசாய சங்க  மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். அதில் 64  உட்பிரிவுகளுக்கு டிஎன்டி ஒற்றைச்சான்றிதழ் வழங்கவேண்டும் என்றும், நிரந்தர  அரசாணைப் பிறப்பிக்க வேண்டும் என்று கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.  மறியலில் ஈடுபட்டவர்களை உசிலம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

Tags : rioting ,
× RELATED எம்எல்ஏக்களுக்கு தலா 25 கோடி பேரம்...