×

வருவாய் துறையினர் வேலைநிறுத்தம்

திண்டுக்கல், பிப். 18: தமிழகம் முழுவதும் நேற்று வருவாய்த்துறை ஊழியர் சங்கம் சார்பில் புதிய பென்சன் திட்டம் ரத்து, காலியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கினர். திண்டுக்கல் மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் ஜான்பாஸ்டின் தலைமை வகிக்க, செயலாளர் சுகந்தி முன்னிலை வகித்தார். பொருளாளர் ராஜேந்திரன், சாலை பணியாளர் சங்க நிர்வாகி பாண்டி சிறப்புரையாற்றினர். போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இணை செயலாளர் விஜயராகவன் நன்றி கூறினார்.

Tags : strikes ,Department ,
× RELATED குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த...