×

வடமதுரை போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடிகள் அடுத்தடுத்து தஞ்சம்

வேடசந்தூர், பிப். 18: வடமதுரை அருகே காட்டுப்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி அனிதா (22). சிலுத்தூரை சேர்ந்த அஞ்சல் ஊழியர் வெற்றிவேல் (23). இருவருக்குள் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால், இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி திண்டுக்கல் அருகேயுள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே அனிதாவை காணவில்லை அவரது பெற்றோர் வடமதுரை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் தேடுவதை அறிந்த காதல்ஜோடி நேற்று முன்தினம் வடமதுரை போலீசில் தஞ்சம் அடைத்தனர். போலீசார் இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணமக்கள் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழ அனுப்பி வைத்தனர். இதேபோல் வடமதுரை அருகே பெரியகோட்டையை சேர்ந்த எம்ஏ பிஎட் பட்டதாரி சரஸ்வதி (29), சித்தூரை சேர்ந்த பிபிஏ பட்டதாரி ராஜ்குமார் (30) ஆகியோர் காதலுக்கும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால் வீட்டை விட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களும் பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீசில் தஞ்சம் அடைய, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, மேஜர் என்பதால் இருவரையும் விருப்பப்படி வாழ அனுப்பி வைத்தனர்.

Tags : couples ,police station ,Vadamadurai ,
× RELATED கம்பம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்