×

நேர்முக தேர்வு

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய செயலிகளுடன் கூடிய ஆண்டாய்டு போன் வழங்குவதற்காக நேர்முக தேர்வு கடந்த 2 நாட்கள் நடந்தது. தேர்வை மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் புவனா, உதவி வேலைவாய்ப்பு அலுவலர் பிரபாவதி, மகளிர் திட்ட உதவி அலுவலர் அன்புச்செழியன், டாக்டர் செந்தில்குமார் நடத்தினர். விதிமுறைகளுக்குட்பட்டு நடந்த இத்தேர்வில் 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் முதற்கட்டமாக 210 பேருக்கு போன் வழங்கப்படுகிறது என மாற்றுத்திறனாளி அதிகாரி தெரிவித்தார்.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...