×

க்ரைம் செய்திகள் சிஐஐ திருச்சி கிளை தலைவராக காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் செங்குட்டுவன் தேர்வு


திருச்சி, பிப். 17: இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) திருச்சி கிளை தலைவராக டாக்டர் செங்குட்டுவன் மற்றும் துணைத்தலைவராக சோமசுந்தரம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிஐஐ கிளை ஆண்டு விழாவில் புதிய நிர்வாகிகளுக்கான தேர்வு நடந்தது. இதில் திருச்சி காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் செங்குட்டுவன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பிரபல குழந்தை சிகிச்சை மருத்துவர் டாக்டர் செங்குட்டுவன் இதற்கு முன் துணை தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அம்மன் ஸ்டீல்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சோமசுந்தரம் சிஐஐ திருச்சி கிளை துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். புதிதாக தேர்வு செய்யப்படட நிர்வாகிகளுக்க சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Senkuttuvan ,Kaveri Hospital ,branch ,CII Trichy ,
× RELATED தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண்...