×

குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜ போராட்டம்

திருச்சி, பிப். 17: திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட 300க்கும் மேற்பட்ட வீடுகளில் துப்புரவு பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் சுகாதார வசதிகள் குறைவாக இருப்பதை கண்டித்து நடந்த போராட்டத்தில் தீர்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், முறைகேடாக வீடுகள் வழங்கியதை கண்டித்தும், குடியிருப்பு பகுதி மக்களின் வசதிக்காக சமுதாய கூடம் கட்டி கொடுக்காததை கண்டித்தும் திருச்சி பாலக்கரை மண்டல பாஜக சார்பில் பாலக்கரை மெயின் ரோட்டில் உள்ள குடிசை மாற்றுவாரிய அலுவலகத்தை பாஜ மண்டல தலைவர் ராஜசேகர் தலைமையில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு அலுவலகத்தை பூட்டினர். இதையடுத்து காந்தி மார்க்கெட் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் கலைந்து சென்றனர்.

Tags : protests ,BJP ,hut replacement board office ,
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு