×

ஆர்ப்பாட்டம்

திருச்சி, பிப். 17:  பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். இன்சூரன்ஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். 7 ஆண்டு நிறைவுற்ற வாகனத்துக்கு பசுமை வரி இரட்டிப்பை கைவிட வேண்டும். முறைசாரா நலவாரியத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி பிராட்டியூர் ஆர்டிஓ அலுவலகம் முன் சிஐடியூ சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநில துணை செயலாளர் வீரமுத்து தலைமை வகித்தார். சிஐடியூ மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ், ஆட்டோ சங்க திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Tags : Demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்