×

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்களின் உண்டியல் காணிக்கை ரூ.1.78 கோடி வசூல்

மண்ணச்சநல்லூர், பிப். 17: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பிரசித்த பெற்ற கோயிலாகும். சக்தி வழிபாட்டு தலங்களில் முதன்மையாக விளங்குகிறது. சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி விட்டு செல்வர். இந்த பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல்கள் மாதம் இருமுறை எண்ணப்படும். இந்நிலையில் நேற்று  கோயிலில் உள்ள 34 உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் காணிக்கைகளை எண்ணப்பட்டன. அதன் முடிவில் உண்டியல்களில் பக்தர்களின் காணிக்கையாக ரூ.1 கோடியே 78 லட்சத்து 4,873 ரொக்கம், 3 கிலோ 536 கிராம் தங்க நகைகள், 4 கிலோ 840 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 60 இருந்தன.

Tags : devotees ,Samayapuram Mariamman Temple ,
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி