×

மமக ஆர்ப்பாட்டம்

திருவாரூர், பிப்.17: பெட்ரோல். டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி மனிதநேய மக்கள் கட்சியின் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வினை கண்டித்தும் அதனை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் திருவாரூரில் நேற்று பழைய பஸ் நிலையம் முன்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் ஹாஜா நஜிமுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஹாஜாமைதீன், துணை செயலாளர் முகமதுபைசல், பொருளாளர் காதர்பாட்சா, மாநில தலைமை பிரதி நிதி ஜபருல்லாஹ் மற்றும் தமுமுக மாவட்ட தலைவர் முஜிபுர்ரகுமான், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நவாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Mamaka ,demonstration ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயகத்தை...