×

ஒரத்தநாடு அருகே தென்னந்தோப்பில் பதுக்கிய ஆயுதங்கள் பறிமுதல்

ஒரத்தநாடு, பிப்.17: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்திற்குட்பட்ட அதம்பை கிராமத்தில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் தங்கியிருப்பதாக வாட்டாத்திக் கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் சென்றபோது மர்ம நபர்கள் 6 பேரும் தப்பி ஓடிவிட்டனர். தொடர்ந்து தோப்பில் சோதனையிட்டதில் செல்போன்கள், பைக்குகள், பயங்கர ஆயுதங்கள் இருந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர். தப்பியோடிய 6 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். கைப்பற்றிய செல்போனில் உள்ள அழைப்புகளை வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தென்னந்தோப்பின் உரிமையாளரை அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து அவருக்கும், 6 பேருக்கும் என்ன தொடர்பு, அவர்கள் கூலிபடையினரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Orathanadu ,coconut grove ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி