×

அறந்தாங்கி அருகே மேலப்பட்டில் ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

அறந்தாங்கி, பிப்.17: அறந்தாங்கி அருகே தனியாரின் ஆக்கிரமிப்பில் இருந்த இடத்தை வருவாய்த்துறையினர் உதவியுடன் பொதுப்பணித்துறையினர் அகற்றினர். அறந்தாங்கியை அடுத்த மேலப்பட்டு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மேலச்சூரியகுளம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் 2 பேர் 3.64 ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தை ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்திருந்தனர். தனியார்ஆக்கிரமிப்பு செய்திருந்த இடத்தை அகற்றும் பணி நேற்று அறந்தாங்கி தாசில்தார் மார்ட்டின்லூர்தர்கிங் தலைமையில் பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி பொறியாளர் செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது. ஆக்கிரமிப்பு செய்திருந்த இடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றினர். இப்பணியின் போது அறந்தாங்கி ஆர்ஐ செந்தில்குமார், விஏஓ மோகன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags : Upper Lake ,Aranthangi ,
× RELATED கடத்தப்பட்ட அரசு பஸ் விபத்தில் சிக்கியது