×

விண்ணப்பிக்க 23ம் தேதி கடைசி அரியலூர் மாவட்டத்தில் மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூர்,பிப்.17: அரியலூர் மாவட்டத்தில் மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்க வரும் 20ம் தேதி கடைசி நாளாகும். தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது விநியோகம் செய்யப்பட உள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்கும்போது ஆதார் மற்றும் ஓட்டுநர் உரிம விபரங்களை தெரிவிப்பது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனம் பெறுவதற்கான மானியம் அளிக்கப்பட உள்ளது. அதன்படி, ரூ.25,000 அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் ஆகியவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.31250 வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களே தங்களது வாகனத்தை தேர்வு செய்யலாம். மேலும், வாகனத்தை பெற ரிசர்வ் வங்கியால் அதிகாரம் அளிக்கப்பட்ட வங்கிகளிடமிருந்து கடன் பெறலாம்.

இருசக்கர வாகன திட்டம் பணிபுரியும் மகளிருக்கு மட்டுமே அளிக்கப்படும். அமைப்பு மற்றும் அமைப்பு சாரா நிறுவனங்களில் பதிவு செய்த பெண்கள், வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுவோர், சுயமாக தொழில் செய்யும் பெண்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தனியார் நிறுவனங்கள், அரசு திட்டங்களில் பணியாற்றுவோர், மாவட்ட கற்றல் மையம், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஆகியவற்றில் பணியாற்றுவோர் இந்த திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம். இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் மானியம் பெற 18 வயது முதல் 45 வயது வரையில் ஒட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களது ஆண்டு வருமான அளவு ரூ.2,50,000ஐ தாண்டக்கூடாது. மிகவும் பின்தங்கிய பகுதிகள், மலை பகுதிகள், கணவனால் கைவிடப்பட்டோர், கணவனை இழந்தோர், மாற்றுத்திறனாளிகள், 35 வயதை தாண்டிய திருமணம் ஆகாத பெண்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பங்களுக்கு எந்த கட்டணமும் இல்லை. அவற்றை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். மேலும், www.tamilnadumahalir.org என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் அளிக்கப்படும். விண்ணப்பங்களை வரும் 20ம் தேதி பிற்பகல் 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். அன்றே கடைசி நாளாகும். இருசக்கர வாகனத்திற்கான மானியம் பெறுவோர் சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகிறது. அதன்படி வயதிற்கான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் (ஆதார் அட்டை, ஒட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை இவைகளில் ஏதேனும் ஒன்று), வங்கி கணக்கு புத்தக நகல், ஒட்டுநர் உரிமம், வாகனத்தின் விலைப்புள்ளி, வருமான சான்றிதழ் வேலை அளிப்பவரிடமிருந்து பெற வேண்டும். வேலையின் தன்மை குறித்த சான்றிதழ் ஆதார் அட்டை, கடவு சீட்டு அளவு புகைப்படம், ஜாதி சான்றிதழ் (தாழ்த்தப்பட்ட பழங்குடியின வகுப்பினராக இருந்தால்) ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

Tags : district ,Ariyalur ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...