×

தா.பழூர் பகுதியில் போதை பொருட்களின் தீமை குறித்த விழிப்புணர்வு பிரசாரம்

தா.பழூர்,பிப்.17: அரியலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்து கூறினர். கள்ளச்சாராயம் தயாரித்தல், விற்பனை செய்தல், சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்தல், கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்தல் அல்லது பயன்படுத்துதல் போன்றவை பற்றி பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு தகவல் தெரிவிக்க 10581 என்கிற தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலை, இடங்கண்ணி பிரிவு சாலை, கடைவீதி போன்ற பகுதிகளில் காவல்துறையினர் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

Tags : Dhaka ,
× RELATED வங்கதேசத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக சேலையூர் எஸ்.ஐ. கைது!!