×

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்

நாகை,பிப்.17: தேசியமயமாக்கப்பட்ட வங்களில் விவசாயிகள் பெற்ற கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சிவசேனா கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சிவசேனா கட்சியின் தஞ்சை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகையில் நடந்தது.மாநிலச் செயலாளர் சுந்தரவடிவேலன் தலைமை வகித்தார். நாகை மாவட்ட தலைவர் செந்தில், திருவாரூர் மாவட்ட தலைவர் நீலமேகம் தஞ்சை மாவட்ட தலைவர் முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை துறைமுகத்தை கூடுதல் நிதி ஒதுக்கி மேம்படுத்தி வர்த்தக துறைமுகம் ஆக்கவேண்டும். மூன்று மதங்கள் சங்கமிக்கும் நாகை மாவட்டத்தை ஆன்மிக சுற்றுலா தளமாக அறிவித்து உள்நாட்டு விமான நிலையம் அமைக்க வேண்டும். எரிவாயு விலையை குறைக்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். கும்பகோணத்தை தலைமயிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் இளைஞரணி மாநில செயலாளர் சிங்கார வடிவேலன், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் முத்துமாரி, மகளிர் அணி மாவட்ட தலைவி சசிகலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : banks ,
× RELATED வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்