×

காரைக்காலில் மேலும் 5 பேருக்கு கொரோனா

காரைக்கால், பிப். 17: காரைக்காலில் நேற்று முன் தினம் 409 பேருக்கு மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்ததில் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் நகரப் பகுதியில் 4 பேருக்கும், அம்பகரத்தூரில் ஒருவருக்கும் என 5 பேருக்கு கொரோனா நோய் தொற்று உள்ளது. 3,958பேருக்கு இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு 3862 பேர் குணமடைந்துள்ளனர். 29பேர் தனிமையிலும், சிகிச்சையிலும் இருந்து வருகின்றனர். 71 பேர் கொரோனா தொற்றுடன் உயிரிழந்துள்ளனர். 365 சுகாதார பணியாளர்களுக்கும் 44 முன் களப்பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Tags : Corona ,Karaikal ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...