லோடு ஆட்டோவில் வந்த 31 பேரில் 15 பேர் மணியாச்சி பகுதி நிலங்களில உளுந்து செடிகள் பறிக்கும் பணிக்கும் 16 பேர் புதியம்புத்தூர் அருகே சவரிமங்கலத்தில் நடைபெறும் பணிக்கும் அழைத்து வரப்பட்டனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து அரை கி.மீ. தொலைவில் தான் 15 பேர் வேலை பார்க்கக்கூடிய இடம் இருந்துள்ளது. அதற்குள் இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.