×

5 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம்: முதல்வர் உத்தரவு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திருநெல்வேலி மாவட்டம், மணப்படைவீடு கிராமத்தை சேர்ந்தவர்கள் விவசாய கூலி வேலைக்கு சென்ற தனியார் வாகனம் தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் மணியாச்சி கிராமம் அருகே நேற்று காலை கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள ஓடையில் விழுந்தது. இதில் வாகனத்தில் பயணம் செய்த பேச்சியம்மாள், ஈஸ்வரி, மலையழகு, மனோகரன் மனைவி பேச்சியம்மாள், கோமதி ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : families ,women ,Chief Minister ,
× RELATED ஆபாச வீடியோக்களை வெளியிட்டது யார்?.....