×

கோவில்பட்டியில் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சிக்கான சிறப்பு முகாம் அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கிவைத்தார்

கோவில்பட்டி, பிப். 17:  கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் தொழில் பயிற்சி நிறுவனங்களில் இளைஞர்களை  சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது. இதில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 525 பேர்  பங்கேற்றனர். முகாமை துவக்கிவைத்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, இவர்களில் 267 பேருக்கு பயிற்சியில் சேர்வதற்கான ஆணைகளை வழங்கினார். முகாமில் மாவட்ட ஊராட்சி தலைவர்  சத்யா, கோவில்பட்டி யூனியன் தலைவர் கஸ்தூரி, துணைத்தலைவர்  பழனிச்சாமி, முன்னாள் யூனியன் துணைத்தலைவர் சுப்புராஜ், பிடிஓக்கள்  சசிகுமார், ஐகோர்ட் ராஜா பங்கேற்றனர்.

Tags : Kadambur Raju ,camp ,Kovilpatti ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு