×

ஆண் சடலம் மீட்பு

ஆண்டிபட்டி, பிப். 17: ஆண்டிபட்டி அருகே, வைகை அணைப் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பாழடைந்த கட்டிடத்தில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கயிற்றில் தொங்கிக் கொண்டிருப்பதை, கரட்டுப்பட்டி பொதுப்பணித்துறை பணியாளர் சுரேந்திரன் பார்த்து அளித்த தகவலின்பேரில், வைகை அணை போலீசார் உடலை மீட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED உடையார்பாளையம் அருகே பழமையான பல்லவர் கால அய்யனார் சிலை கண்டெடுப்பு