×

கிணற்றில் மிதந்த முதியவர் உடல்

மானாமதுரை, பிப்.17: மானாமதுரை அருகே வேலூர் கவுல் கிராமத்தை சேர்ந்தவர் விஜயராமன்(65). இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்துபோனதால் தனியாக வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று தனது வீட்டிற்கு அருகே இருந்த கிணற்றில் இறந்து கிடந்தார். உடல்நிலை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வயது முதிர்வு காரணமாக கிணற்றில் தவறிவிழுந்து இறந்தாரா என மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : well ,
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...