×

மனைவியை பார்க்க வந்த கணவர் சாவு

காளையார்கோவில், பிப்.17:  காளையார்கோவில் அருகே மனைவியை பார்க்க டூவீலரில் வந்த கணவர் விபத்தில் உயிரிழந்தார். கோவை கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அழகிரிசாமி மகன் செல்வராஜ்(38). கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. செல்வராஜ் தனது மனைவியின் சொந்த ஊரான காளையார்கோவில் அருகே கண்டனிப்பட்டிக்கு சமீபத்தில் வந்தார். நேற்று முன்தினம் இரவு டூவீலரில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஜெபத்தோட்டம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் டூவீலர் மீது மோதியது. தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த காளையார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Death ,
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு