×

காதில் பூ வைத்து போராட்டம் 13வது நாளாக நீடிப்பு

மதுரை, பிப்.17: காதில் பூ சூடி மக்கள் நலப்பணியாளர்கள் நேற்று 13வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். கடந்த திமுக ஆட்சியில் மக்கள் நலப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 2011ல் பதவியேற்ற அதிமுக அரசு அவர்களை பணி நீக்கம் செய்தது. மீண்டும் பணி வழங்க கோரி கடந்த 10 ஆண்டுகளாக இவர்கள் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தினர்.  ஆனால் அவர்களுக்கு பணிக்கான ஆணை வழங்க வில்லை. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பணி வழங்க கோரி, மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு கடந்த 4ம் தேதி முதல் மக்கள் நலப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர். மாநில தலைவர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். அன்று முதல் பகல் இரவு நேரத்திலும் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒருவிதமான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நேற்று 13வது நாளாக  காதில் பூ வைத்து கோரிக்கை தொடர்பாக காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். 13 நாட்களாக போராட்டம் நடத்தியும் இதுவரை அரசு பேச்சுவார்த்தை உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  


Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ