×

டூவீலர் விபத்தில் வாலிபர் பலி

வாழப்பாடி, பிப்.17: பெத்தநாயக்கன்பாளையம் அருகே கல்லேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் சந்துரு(22). மும்பையில் வேலை செய்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்த இவர், நேற்று உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, டூவீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வாழப்பாடி அருகே கொட்டவாடி பிரிவு சாலையில் வந்தபோது திடீரென தறிகெட்டு ஓடிய டூவீலர், சாலையோரம் இருந்த இரும்பு தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த சந்துரு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வாழப்பாடி போலீசார்விசாரித்து வருகின்றனர்.

Tags : Walibar ,accident ,
× RELATED மானூர் அருகே வாலிபர் மாயம்