×

கல்லூரி மாணவி கடத்தல் வாலிபர் மீது வழக்குப்பதிவு

தாரமங்கலம்,  பிப்.17: தாரமங்கலம் அருகே தெசவிளக்கு கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின்  17வயது மகள், சேலம் கோரிமேடு அரசு மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு  படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, வீட்டில்  யாரும் இல்லாதபோது வெளியே சென்ற மாணவி, அதன் பின்பு வீடு திரும்பவில்லை.  தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தாரமங்கலம் போலீசில் புகார் தெரிவித்தனர். அதில், அதே  பகுதியைச் சேர்ந்த டிப்ளமோ படித்துள்ள 19வயது வாலிபர், மாணவியை மகளை கடத்திச் சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து  விசாரித்து வருகின்றனர்.

Tags : college student abduction teenager ,
× RELATED 21ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்