ஓமலூர், பிப். 17: ஓமலூர் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில், காங்கிரஸ் கட்சி சார்பில், டெல்லி போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்துப்பட்டது. வட்டார தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். இதில் மாவட்ட துணை தலைவர் சந்திரசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாசலம், மாவட்ட இளைஞரணி தலைவர் கணேசன், கந்தசாமி, மாதையன், ரங்கநாதன், சின்ராஜ், சக்தி, நடேசன், பொன்னுசாமி, அழகேசன், மணி, ராமலிங்கம், பழனிசாமி, ராஜப்பன், பழனி, தங்கராஜ் உட்பட பலரும் கலரும் கலந்துகொண்டனர்.