இளம்பிள்ளை, பிப்.17: சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் மகுடஞ்சாவடியில் ₹45 கோடி மதிப்பில் 293 மீட்டர் நீளமும், 34.2 மீட்டர் அகலம் கொண்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சட்டப்பேரவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்க இருப்பதால், இப்பணியை விரைந்து முடிக்க தொழிலாளர்கள் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர். தற்போது ராட்சத இயந்திரம் மூலம் மேம்பாலத்தின் மேல் கான்கிரீட் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.