×

பள்ளிபாளையத்தில் மாணவியை கடத்திய வாலிபருக்கு 7 ஆண்டு சிறை

நாமக்கல், பிப்.17: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பாதரை மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னுசாமி. இவரது மகன் சதீஷ்(24). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது பிளஸ்2 மாணவியை கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பள்ளிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தனர். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சதீஷை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சுசிலா ஆஜராகி வாதிட்டார். நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி சசிரேகா, குற்றம்சாட்டப்பட்ட சதீஷூக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Tags : Juvenile ,school ,kidnapping student ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி