×

சாலை பாதுகாப்பு விழாவில் விழிப்புணர்வு வாகனங்களுக்கு ரிப்ளக்டர் ஸ்டிக்கர்

திருச்செங்கோடு, பிப்.17: திருச்செங்கோட்டில், சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு கையேடு வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் மாதேஸ்வரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செந்தில்குமார், குணசேகரன் ஆகியோர் திருச்செங்கோடு- ஈரோடு சாலையில் சென்ற லாரி மற்றும் டூவீலர், சரக்கு வாகனங்களை நிறுத்தி பிரதிபலிப்பான் இல்லாத வாகனங்களுக்கு ரிப்ளக்டர் ஸ்டிக்கர் ஒட்டினர். இரவில் வாகனங்கள் செல்லும்போது பிரதிபலிப்பான் இல்லாவிட்டால் முன்னால் செல்லும் வாகன ஓட்டிகள், எதிரே வரும் மற்ற வாகனங்களின் டிரைவர்களுக்கு தெரியாமல் போகும் நிலை உள்ளது. இதன்மூலம் விபத்து நடக்கும் அபாயம் ஏற்படும். இதனை தவிர்க்க இவ்வாறான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருவதாக  ஆர்டிஓ தெரிவித்தார்.

Tags : road safety event ,
× RELATED விபத்தில்லா மாவட்டமாக மாற்ற...