×

நாளை நடக்கிறது கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி முகாம்

கிருஷ்ணகிரி, பிப்.17: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற இளைஞர்களுக்கான தொழில்திறன் பயிற்சி முகாம் நாளை நடக்கிறது.
இதுகுறித்து கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம்  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீன் தயாள் உபாத்யாய கிராமின்  கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் பிப்ரவரி மாதம் திறன் பயிற்சிக்கான மாதமாக  அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு  வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் நாளை(18ம் தேதி) பல்வேறு தொழில் திறன்  பயிற்சி முகாம் நடைபெறுகிறது.  

இம்முகாம் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம்,  வேப்பனஹள்ளி பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, பெத்தாளப்பள்ளி ஊராட்சியில்  உள்ள வட்டார இயக்க மேலாண்மை அலகிலும், மத்தூர், ஊத்தங்கரை, பர்கூர் பகுதியை  சேர்ந்தவர்களுக்கு மத்தூரில் உள்ள வட்டார இயக்க மேலாண்மை அலகிலும், ஓசூர்,  கெலமங்கலம், சூளகிரி, தளி வட்டாரங்களை சேர்ந்த கிராமப்புற இளைஞர்களுக்கு  ஓசூர் வட்டார இயக்க மேலாண்மை அலகிலும் நடைபெறுகிறது.

முகாமில், சில்லறை  விற்பனை மேலாண்மை, உணவு மற்றும் குளிர்பானம் தயாரித்தல், கணக்கியல்  உதவியாளர், நர்சிங் பயிற்சிகள், ஆய்வக உதவியாளர், பொது உதவியாளர், தையல்  பயிற்சி, செக்யூரிட்டி பயிற்சி, டேலி பயிற்சி, அழகுக் கலை பயிற்சி, மருந்தக  உதவியாளர், ஆட்டோ மொபைல் சர்வீஸ், வங்கி மற்றும் நிதி தொடர்பான சேவைகள்,  இளநிலை மென்பொருள் டெவலப்பர், பொறியியல் பயிற்சி, சிசிடிவி கேமரா  பொருத்துதல், வெல்டிங் டெக்னீசியன், சூரிய தகடு பொருத்துதல், பொருட்கள்  மற்றும் சேவை வரி, கணக்கியல் நிர்வாகி, பொருட்கள் மற்றும் சேவை வரி  உள்ளிட்ட பயிற்சிகள் 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை வழங்கப்பட உள்ளன. இப்பயிற்சியில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்ற 18 வயது முதல்  35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், மகளிர் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு  செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : training camp ,
× RELATED ஹர்திக் நியமனம் பேசும் பொருளானாலும்...