×

குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்கு மாடி குடியிருப்பு: கட்டுமான பணி துவக்கம்

தர்மபுரி, பிப்.17: குடிசை மாற்று வாரியம் சார்பில், பாப்பிரெட்டிப்பட்டி அருகே ₹14.19 கோடியில் 192 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுமான பணி துவங்கியது. பாப்பிரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் பூனையானூர் கிராமத்தில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், ₹14.19 கோடி மதிப்பில் 192 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுமான பணி துவக்கவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு சார் ஆட்சியர் பிரதாப் தலைமை வகித்தார். உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

விழாவில் எம்எல்ஏ கோவிந்தசாமி, வருவாய் கோட்டாட்சியர்(பொ) தணிகாசலம், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் விஸ்வநாதன், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் விஜயமோகன், மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி சேகர், வட்டாட்சியர் பார்வதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமஜெயம், ஜெகதீசன், கூட்டுறவு சங்க தலைவர் மதிவணண், நல்லத்தம்பி ஆகியோர் கலந்து
கொண்டனர்.

Tags : Apartments ,Cottage Replacement Board ,Commencement ,
× RELATED உரிய ஆவணமில்லாத ரூ.68 ஆயிரம் பறிமுதல்