×

மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டத்தில் திரளானவர்களை பங்கேற்க செய்ய முடிவு

திருப்பூர், பிப். 17:  திருப்பூர் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம், மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில், கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில்,தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி. நாகராசன் உட்பட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.  வருகிற 21ம் தேதி காலை 8 மணிக்கு திருப்பூர் காங்கேயம் ரோடு ராக்கியாபாளையம் பிரிவு அருகே பள்ளக்காட்டு புதூரில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியில் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக பெட்டியில் போட்டு தெரிவிக்க உள்ளனர்.

மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானவர்களை பங்கேற்க செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும், பள்ளக்காட்டு புதூரில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ள இடத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் விழா மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட உள்ளது. அதேேபால் வாகனங்களை நிறுத்துவதற்கு 60 ஏக்கர் பரப்பளவில் இடம் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான ஆயத்த பணிகளில் தி.மு.க.வினர் ஈடுபட்டுள்ளனர். வாகன நிறுத்தும் இடத்தில் நேற்று முன்தினம் பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டது.

Tags : MK Stalin ,meeting ,crowd ,
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...