×

காங்கயம் அருகே திருடு போன சுவாமி சிலை 5 நாளில் அதே இடத்திற்கு வந்தது

காங்கயம், பிப். 17: காங்கயம் அருகே கோவிலில் இருந்து மர்ம நபர்களால் திருடப்பட்ட சுவாமி சிலை ஐந்து நாட்களுக்கு பின் திரும்ப கோவில் அருகே வைத்து விட்டு சென்றனர். காங்கயம் வட்டம், துண்டுக்காடு கிராமம், குருகிலியம்பாளையத்தில் அழகர் குலத்தவருக்கு சொந்தமான ஸ்ரீ வீரமாத்தி அம்மன் கோவிலில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 11ம் தேதியன்று விநாயகர் சிலை மர்மமான முறையில் காணாமல் போனது. கிராம மக்கள் சிலையை தேடிவந்தனர். காங்கயம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ஐந்து நாள் முடிந்த நிலையில் நேற்று கோவிலில் மீண்டும் விநாயகர் சிலை மர்மமான முறையில் யாருக்கும் தெரியாமல் வைத்து விட்டு சென்றுள்ளார்கள். இதுவரை கோவிலில் காணாமல் போன சிலை திரும்ப வந்ததில்லை. காணாமல் போன சிலை திரும்ப வந்தது கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : idol ,Swami ,Kangayam ,
× RELATED மருதுறை ஊராட்சியில் குடிநீர் குழாய்,...